பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), மூன்று வருட FCNR(B) டெபாசிட்களுக்கு 6.00 சதவீதமும், ஐந்து வருட டெபாசிட்களுக்கு 6.10 சதவீதமும் வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த தாராளமான கொள்கையைப் பயன்படுத்தி, NRI டாலர் டெபாசிட்களை ஈர்க்க வங்கிகள் தீவிரமாக போட்டியிடுவதையே இந்த அதிக வட்டி விகிதங்கள் காட்டுகின்றன.
மற்ற வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. ஐடிபிஐ வங்கி மூன்று வருட டெபாசிட்களுக்கு 6.00-6.10 சதவீதமும், ஐந்து வருடங்களுக்கு 6.10-6.20 சதவீதமும் வழங்குகிறது. யெஸ் வங்கி முறையே 6.50 சதவீதம் மற்றும் 6.60 சதவீதம் வட்டி கொடுக்கிறது. கனரா வங்கி இரண்டு காலங்களுக்கும் 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்தியன் வங்கி மூன்று வருடங்களுக்கு 5.50 முதல் 6 சதவீதம் வரையிலும், ஐந்து வருடங்களுக்கு 6 முதல் 6.50 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது.
அந்நிய செலாவணி அதிகரிக்கும்
இந்த நடவடிக்கைகளால் கணிசமான அந்நிய செலாவணி இந்தியாவுக்குள் வரும் என வங்கித் துறை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த சலுகைகள் மூலம் சுமார் 35 பில்லியன் முதல் 40 பில்லியன் டாலர் வரை இந்தியாவுக்குள் வரலாம் என பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.