ஓய்வூதியம்: NPS vs UPS - எது சிறந்தது?

Published : May 26, 2025, 11:03 AM IST

மத்திய அரசு ஊழியர்கள் ஜூன் 2025-க்குள் NPS அல்லது புதிய UPS திட்டத்தில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். UPS உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்குகிறது, NPS சந்தை சார்ந்தது மற்றும் அதிக வருமானம் தரக்கூடும் ஆனால் அபாயகரமானது.

PREV
15
சரியான ஓய்வூதிய திட்டம் இதுவே

பாதுகாப்பான மற்றும் நிலையான ஓய்வூதியத்தை நீங்கள் விரும்பினால், சரியான ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. சந்தையுடன் இணைக்கப்பட்ட வருமானம் மற்றும் நெகிழ்வுத்தன்மை உங்களுக்கு வசதியாக இருந்தால், தேசிய ஓய்வூதிய முறை சிறந்த தேர்வாக இருக்கும் என்கின்றனர் முதலீட்டு ஆலோசகர்கள்.

25
சரியானதை தேர்வு செய்ய வேணடும்

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, உறுதியான ஊதியத்தைப் பெறும் விதமாக, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ், மத்திய அரசால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வருகிற ஜூன் 2025-க்குள் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகவுள்ளது. அதாவது, ஜூன் 2025 க்குள், தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒரு ஊழியர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துவிட்டால், அவரது முடிவை மாற்ற முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் இரண்டிலும் உள்ள சாதக பாதகங்களை அறிந்து கொண்டால் அரசு ஊழியர்கள் சரியான திட்டத்தை தேர்வு செய்யலாம்.

35
UPS திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

UPS திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் – உத்தரவாதமுடைய ஓய்வூதியம். ஓய்வு பெறும் போது, ஊழியரின் கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தின் 50% ஓய்வூதியாக வழங்கப்படும்.இது நிச்சய வருமானத்தை விரும்பும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மையாகும். UPS திட்டத்தில் ஊழியர் தனது சம்பளத்தினதும் தங்கியடுக்கும் கொடுப்பனவினதும் (DA) 10% தொகையை செலுத்த வேண்டும். அரசு 18.5% வரை பங்களிப்பு செலுத்தும், இதில் 8.5% ஊதிய உத்தரவாத நிதிக்கு செல்கிறது.

45
NPS திட்டத்தின் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

NPS திட்டம் – அதிக வருமானம் ஆனால் சந்தை சார்ந்த அபாயம்.NPS என்பது சந்தை சார்ந்த ஓய்வூதியத் திட்டமாகும். நீங்கள் பங்கு சந்தையைப் புரிந்துகொண்டு, நீண்ட கால முதலீடுகளில் அனுபவம் கொண்டவராக இருந்தால், NPS உங்கள் ஓய்வுக்கால வருமானத்துக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். தற்போதைய NPS திட்டத்தில், ஊழியர் 10% செலுத்த, அரசு 14% பங்களிக்கிறது.

55
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஓய்விற்கு இன்னும் 10–20 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு சந்தை அபாயத்தை புரிந்துகொள்ளும் திறன் இருந்தால், NPS அதிக வருமானம் தரக்கூடும்.” நிச்சய வருமானம் விரும்பும் ஊழியர்கள் UPS-க்கு மாறலாம். UPS தேர்வு செய்தால், மீண்டும் NPS-க்கு திரும்ப முடியாது என்று அரசு உறுதியாக அறிவித்துள்ளது. எனவே, நீங்கள் எந்த திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சந்தை அபாயத்தை ஏற்கும் வகையில் நிதி முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருந்தால், NPS திட்டம் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரக்கூடும். ஆனால், உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கையில் நிச்சயமான வருமானத்தை விரும்புபவராக இருந்தால், UPS என்பது நல்ல தேர்வாக இருக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories