NPS வாத்சல்யா vs NPS: 0-18 வயதுக்குட்பட்ட சிறார்/குழந்தைகள் சார்பாக பெற்றோர்/பாதுகாவலர்கள் சிறாரின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். மேலும் அவருக்கு PRAN எண்ணும் வழங்கப்படும்.
NPS வாத்சல்யா vs NPS: சமீபத்தில், 0-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்காக அரசாங்கம் NPS வாத்சல்யாவை அறிமுகப்படுத்தியது. அரசு ஊழியர்களுக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறை (NPS), பின்னர் 2009 ஆம் ஆண்டு அனைத்து குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஜூலை 2024ல், நிதியமைச்சர் சிறார்களுக்கான சிறப்பு NPS திட்டத்தை அறிவித்தார். இது NPS வாத்சல்யா. இந்த பதிவில், NPS வாத்சல்யாவின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்.
என்.பி.எஸ் வாத்சல்யா: யார் கணக்கு தொடங்கலாம்
0-18 வயதுக்குட்பட்ட சிறார்கள்/குழந்தைகள் சார்பாக பெற்றோர்/பாதுகாவலர்கள் சிறாரின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். மேலும் அவருக்கு PRAN எண்ணும் வழங்கப்படும்.
NPS வாத்சல்யா: தேவையான ஆவணங்கள்
சிறாரின் பிறப்புச் சான்றிதழ், பாதுகாவலர்/பெற்றோரின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, NREGA வேலை அட்டை அல்லது KYCக்கான தேசிய மக்கள்தொகைப் பதிவேடு அட்டை. பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க பாதுகாவலர்/பெற்றோரின் பான் கார்டு.