நெடுஞ்சாலை விதிகளின்படி, ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாக செலுத்தினால் இருமடங்கு கட்டணமும், யுபிஐ மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்து, டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தியுள்ளன.
ரொக்கப் பணம் செலுத்துவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தாமதம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முழு டிஜிட்டல் கட்டண முறைக்கு மாறுவது, 1,150-க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, தாமதங்களைக் குறைத்து, பயனர் அனுபவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.