வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், படிப்பைத் தாண்டி தங்களின் நிதி நிலையைச் சரிபார்க்க வேண்டும்.
முதலில் உங்களின் சிபில் அறிக்கையை (CIBIL Report) இலவசமாகச் சரிபார்க்கவும்.
ஏதேனும் நிலுவை இருந்தால், உடனடியாக அதைச் செலுத்தி ‘No Due Certificate’ பெற்றுக்கொள்ளவும்.
தேவையில்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
வங்கித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றவர்களின் பணத்தைக் கையாளுபவர்கள் என்பதால், அவர்களின் தனிப்பட்ட பொருளாதார ஒழுக்கம் மிக முக்கியமானது என்று அரசு கருதுகிறது. எனவே, வெறும் புத்தக அறிவை மட்டும் வளர்த்துக்கொள்ளாமல், ஒரு பொறுப்பான குடிமகனாகத் தனது கடன் சுமைகளையும் சரியாகக் கையாளுபவர்களுக்கே இனி வங்கி வேலை கதவுகள் திறக்கப்படும்.