அவசர தேவைக்கு உதவும் தங்கம்
தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் ஒரு சவரன் மட்டும் ஒரு லட்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் செலுத்து வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவசர தேவைக்கு எந்த நேரத்திலும் தங்கத்தை விற்க முடியும், அடகு வைக்க முடியும், இதுவே நிலம், கார், வீடு போன்றவற்றில் முதலீடு செய்தால் மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு பணத்தை உடனடியாக பெற முடியாத நிலை உருவாகும். இதன் காரணமாகவே தங்கத்தை அதிகளவு மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.