டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்

Published : Mar 20, 2026, 08:45 AM IST

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் செலுத்தாத வாகனங்களுக்கு 72 மணி நேரத்திற்குள் இ-நோட்டீஸ் அனுப்பும் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறினால், அபராதம் இரட்டிப்பாக்கப்படும்.

PREV
15
72 மணி நேரம் தான் டைம்

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் தவிர்ப்பவர்களுக்கு இனி “சாதாரணம்” இல்லை. 2026 புதிய விதிமுறைகள் மூலம் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டோல் செலுத்தாமல் பயணம் செய்த வாகனங்களுக்கு இப்போது நேரடியாக இ-நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். இது டிஜிட்டல் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

25
எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன்

புதிய விதிகளின்படி, பாஸ்டேக் அல்லது எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (ETC) முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் டோல் கட்டணம் செலுத்தாமல் சென்றால், அது “செலுத்தப்படாத பயன்பாட்டுக் கட்டணம்” எனக் கருதப்படும். உடனடியாக அந்த வாகன உரிமையாளருக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது மொபைல் ஆப் மூலம் இ-நோட்டீஸ் அனுப்பப்படும். இதில் வாகன விவரம், பயணித்த தேதி மற்றும் நேரம், டோல் பிளாசா தகவல் மற்றும் கட்ட வேண்டிய தொகை ஆகியவை இடம்பெறும்.

35
72 மணி நேரத்திற்குள் கட்டணம்

இந்த அறிவிப்பு கிடைத்த 72 மணி நேரத்திற்குள் கட்டணம் செலுத்தினால், வழக்கமான டோல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே போதும். ஆனால் அந்த காலக்கெடு கடந்தால், கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும். நோட்டீஸ் தவறாக வந்ததாக நினைப்பவர்கள், 72 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். அந்த புகார் 5 நாட்களுக்குள் பரிசீலித்து தீர்வு அளிக்கப்படும்.

45
நிலுவை தொகை

எனினும், 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்படாவிட்டால் அல்லது புகார் அளிக்கப்படாவிட்டால், நிலுவை தொகை வாகனத் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும். இதனால் வாகனத்துடன் தொடர்புடைய சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் டோல் தவிர்ப்பை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.

55
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

இதற்கிடையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கும் பாஸ்டேக் ஆண்டுச் சலுகை பாஸின் கட்டணமும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1 முதல், இந்த பாஸ் ரூ.3,000 முதல் ரூ.3,075 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய உயர்வாக தோன்றினாலும், அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு இது கூடுதல் செலவாக அமையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories