August 1 Rules: தட்கல் டிக்கெட் புக் செய்ய போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய நடைமுறை அமல்!

Published : Jul 28, 2026, 07:25 AM IST

August 1 Rules: தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகள் சந்திக்கும் நீண்ட காத்திருப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.

PREV
15
தட்கல் டிக்கெட்டில் புதிய மாற்றங்கள்

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிக்கலைக் குறைத்து, பயணிகளுக்கு வேகமான சேவையை வழங்கும் நோக்கில் மேற்கு மத்திய இரயில்வே (WCR) புதிய டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 ஆகஸ்ட் 1 முதல் அந்த மண்டலத்திற்கு உட்பட்ட ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, டிக்கெட் பெறும் நடைமுறையையும் மேலும் ஒழுங்குபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

25
ரயில் டிக்கெட்

புதிய விதிமுறையின்படி, ஏசி வகுப்புக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவை விரும்பும் பயணிகளுக்கு காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். மேலும், ஸ்லீப்பர்/நான்-ஏசி வகுப்புக்கான பயணிகளுக்கு காலை 9.00 மணி முதல் 9.30 மணி வரை டோக்கன் வழங்கப்படும். இதற்கு முன்பு இருந்த நேரத்தை விட டோக்கன் வழங்கும் நேரம் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தட்கல் முன்பதிவு தொடங்கும் அதிகாரப்பூர்வ நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம்போல் ஈசி வகுப்புக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு, ஏசி அல்லாத வகுப்புக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்கும்.

ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்

35
ஆகஸ்ட் 1 மாற்றம்

இந்த புதிய டோக்கன் முறையின் முக்கிய பலன் என்னவென்றால், டோக்கன் பெற்ற பிறகு பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். ஒவ்வொரு முன்பதிவு கவுண்டரிலும் ஏசி வகுப்புக்கு அதிகபட்சமாக 10 டோக்கன்களும், ஏசி அல்லாத வகுப்புக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன. இருப்பினும், பயணிகளின் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கையை அந்தந்த உள்ளூர் ரயில்வே நிர்வாகம் மாற்றிக்கொள்ளும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டோக்கன் வைத்திருப்பவர்களின் முன்பதிவு முழுமையாக முடிந்த பிறகே முன்னுரிமை டிக்கெட்டுகள் 'முதலில் வருபவருக்கு' என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

45
தட்கல் முன்பதிவு

பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்த டோக்கன்களை வேறு யாருக்கும் மாற்றிக்கொடுக்க முடியாது என்பதாகும். டோக்கன் பெற்ற நபரே நேரில் வந்து டிக்கெட்டை பெற வேண்டும். அதே நேரத்தில், செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கே டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

55
புதிய டோக்கன் முறை

தற்போதைக்கு இந்த புதிய டோக்கன் விநியோக முறை மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள கவுண்டர் தட்கல் முன்பதிவுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், இந்த முயற்சி பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், எதிர்காலத்தில் மற்ற ரயில்வே மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories