ஐஆர்சிடிசி 12 நாட்கள், 7 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் துவாரகாவை உள்ளடக்கிய புதிய சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. நவம்பர் 18, 2025 முதல் தொடங்கும் இந்தத் தொகுப்பில், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), நம் நாட்டில் உள்ள ஏழு புனித ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க புதிய சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. 12 நாட்களில் ஏழு ஜோதிர்லிங்கங்களை இந்தத் தொகுப்பில் தரிசிக்கலாம். மேலும் துவாரகாவையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
25
ஜோதிர்லிங்கம் டூர் பேக்கேஜ்
மஹாகாளேஸ்வர் (மத்தியப் பிரதேசம்), நாகேஸ்வர் (குஜராத்), சோமநாத் (குஜராத்), த்ரியம்பகேஸ்வர் (மகாராஷ்டிரா), பீமாஷங்கர் (மகாராஷ்டிரா), க்ருஷ்ணேஸ்வர் (மகாராஷ்டிரா), ஓம்காரேஸ்வர் (மத்தியப் பிரதேசம்) ஆகிய ஜோதிர்லிங்கங்களை இந்த சுற்றுலாத் தொகுப்பில் சேர்த்துள்ளனர். இவற்றுடன், பெட் துவாரகா, துவாரகா போன்ற இடங்களையும் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
35
ஏழு ஜோதிர்லிங்க சுற்றுலாத் தொகுப்பு
இந்த சுற்றுலாத் தொகுப்பு நவம்பர் 18, 2025 முதல் தொடங்கி நவம்பர் 29 வரை 11 இரவுகள், 12 பகல்கள் நடைபெறும். ரயிலில் மொத்தம் 767 படுக்கைகள் உள்ளன. இந்தத் தொகுப்பின் செலவு ஒருவருக்கு ரூ.24,100. இதில் ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி உள்ளன.
இந்தத் தொகுப்பில் ரயில் பயணம், ஹோட்டல்களில் தங்குமிடம், காலை டீ, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகியவை அடங்கும். சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். பயணிகளுக்கு பயணக் காப்பீடும் உண்டு.
55
ஜோதிர்லிங்க தரிசனம்
கோயில் நுழைவுக் கட்டணம், படகு சவாரி, தரிசன நுழைவுக் கட்டணம் போன்றவற்றை ஐஆர்சிடிசி செலுத்தாது. மினரல் வாட்டர், கூடுதல் உணவுப் பொருட்கள் போன்றவற்றை நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.