அதாவது இந்தியன் ரயில்வே விகல்ப் (Vikalp) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளுக்கு கன்பார்ம் சீட் அல்லது கன்பார்ம் பெர்த் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறது. நீங்கள் ரயிலில் டிக்கெட் புக் செய்யும்போதே "I opt for Vikalp Scheme" என்ற பாக்ஸ் உங்களுக்கு காண்பிக்கும்.
இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் அதே நாளில் நீங்கள் பயணிக்க வேண்டிய இடத்துக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் இருந்தால் கன்பார்ம் ஆகும்.
இந்தியன் ரயில்வே 'விகல்ப்' திட்டம்
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் உங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்து அது கடைசி வரை கன்பார்ம் ஆகவில்லை என்றால் உங்களால் அந்த ரயிலில் பயணிக்க முடியாது.
ஆனால் நீங்கள் "I opt for Vikalp Scheme" என்ற ஆப்ஷனை முன்கூட்டியே கிளிக் செய்து இருந்தால் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் அடுத்த ரயிலில் உங்களுக்கு இருக்கை அல்லது பெர்த் வழங்கப்பட்டு பயணம் செய்ய முடியும்.