Plastic Currency: இனி நோட்டு கிழியாது! இந்தியாவுக்கு வருது பிளாஸ்டிக் 10, 20 ரூபாய் நோட்டுகள்!

Published : Aug 12, 2026, 03:29 PM IST

இந்தியாவில் முதற்கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய நோட்டுகள் சந்தைக்கு வரவுள்ளன.

PREV
15
இனி பாலிமர் அல்லது பிளாஸ்டிக் நோட்டுகள்
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மாற்றம் காணப்போகின்றன. நாம் பயன்படுத்தும் 10, 20 ரூபாய் தாள்களுக்குப் பதிலாக இனி பாலிமர் அல்லது பிளாஸ்டிக் நோட்டுகள் வரவுள்ளன.
25
மத்திய அரசு ஒப்புதல்
அரசாங்கம் இந்த புதிய நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்துகிறது. செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 10, 20 ரூபாய் நோட்டுகள் இந்திய சந்தையில் புழக்கத்திற்கு வரும்.
35
புதிய நோட்டுகளை அறிமுகம் செய்ய முடிவு
அரசாங்கம் இந்த புதிய நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நோட்டுகள் வெளியிடப்படும் என அரசு முடிவு செய்துள்ளது.
45
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய நோட்டுகள் வந்தாலும், பழைய நோட்டுகள் உடனடியாக செல்லாது என அறிவிக்கப்படாது. தற்போதைக்கு இரண்டு வகை நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.
55
புதிய வகை நோட்டுகள் எளிதில் கிழியாது
இந்த புதிய வகை நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும். இது ஒரு சிறப்புப் பொருளால் தயாரிக்கப்படுவதால், எளிதில் கிழியாது. ஆனால், இதைத் தயாரிக்க எவ்வளவு செலவானது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த பிளாஸ்டிக் 10, 20 ரூபாய் நோட்டுகள் எப்போது கிடைக்கும் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories