கடந்த மாதம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலர் வரை உயர்ந்தது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது நீண்ட பதிவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 30 முதல் 50%, வட அமெரிக்காவில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 50% வரை விலை உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
"மோடி அரசுக்கு இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று, மற்ற நாடுகளைப் போல விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது. அல்லது, சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, அரசின் கஜானாவிலிருந்து அந்த சுமையை ஏற்பது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக கடைப்பிடிப்பது போலவே, இந்திய மக்களைப் பாதுகாக்க அரசு மீண்டும் ஒருமுறை நிதிச்சுமையை ஏற்க முடிவு செய்துள்ளது என்றும் பூரி கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஒரு நாள் முன்புதான், நயாரா எனர்ஜி நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை 3 ரூபாயும் உயர்த்தியிருந்தது. ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் மற்றும் கேசானி எண்டர்பிரைசஸ் ஆதரவுடன் இயங்கும் இந்த நிறுவனம், 8.4% சந்தைப் பங்குடன் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளராக உள்ளது.