மக்களுக்கு நிம்மதி.. பெட்ரோல், டீசல் குறையப்போகுதா? கலால் வரி ரூ.10 குறைத்த மத்திய அரசு!

Published : Mar 27, 2026, 11:11 AM IST

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றங்களுக்கு மத்தியில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் குறையவோ, உயரவோ செய்யாது.

PREV
15
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த பொதுமக்களுக்கு மத்திய அரசு காலையிலேயே நிம்மதியான செய்தியை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தலா 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், மக்கள் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைப்பதும் இந்த முடிவின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

25
பெட்ரோல் டீசல் குறைய வாய்ப்பில்லை

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாயாகவும், டீசல் மீதான வரியை பூஜ்ஜியமாகவும் குறைத்துள்ளது. ஆனால், இந்த வரி குறைப்பால் பெட்ரோல் பங்குகளில் உடனடியாக விலை குறைய வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சந்திக்கும் கடுமையான நஷ்டத்தை ஈடுகட்ட இந்த வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பின் பலன் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்வதால் பெட்ரோல், டீசல் குறையவோ, உயரவோ செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

35
கச்சா எண்ணெய் விலை

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வால், எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது விற்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கும் 48.8 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகைக்குப் பிறகு, உலக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியது.

45
பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

கடந்த மாதம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலர் வரை உயர்ந்தது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது நீண்ட பதிவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 30 முதல் 50%, வட அமெரிக்காவில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 50% வரை விலை உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

"மோடி அரசுக்கு இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று, மற்ற நாடுகளைப் போல விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது. அல்லது, சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, அரசின் கஜானாவிலிருந்து அந்த சுமையை ஏற்பது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக கடைப்பிடிப்பது போலவே, இந்திய மக்களைப் பாதுகாக்க அரசு மீண்டும் ஒருமுறை நிதிச்சுமையை ஏற்க முடிவு செய்துள்ளது என்றும் பூரி கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஒரு நாள் முன்புதான், நயாரா எனர்ஜி நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை 3 ரூபாயும் உயர்த்தியிருந்தது. ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் மற்றும் கேசானி எண்டர்பிரைசஸ் ஆதரவுடன் இயங்கும் இந்த நிறுவனம், 8.4% சந்தைப் பங்குடன் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளராக உள்ளது.

55
ஹார்முஸ் ஜலசந்தி

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் மற்றும் அதன் விளைவாக டெஹ்ரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிபொருள் விநியோகப் பாதையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories