ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் சாதனை; அடேங்கப்பா! இத்தனை லட்சம் கோடியா?

GST Collection: இந்தியாவில் ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 12.3% அதிகரித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

India collects Rs.1.96 lakh crore GST in January ray
ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் சாதனை; அடேங்கப்பா! இத்தனை லட்சம் கோடியா?

2025ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் மொத்தமாக ரூ.1.96 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.1.74 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 12.3% அதிகரித்துள்ளது.

2024-25ம் ஆண்டில் (ஏப்ரல் முதல் ஜனவரி வரை ) இதுவரை மொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் அதிகரித்து ரூ.18.29 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023-24ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.16.71 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24 நிதியாண்டில் மொத்த மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. 

India collects Rs.1.96 lakh crore GST in January ray
ஜிஎஸ்டி வசூல்

இது முந்தைய நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரலில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்திருந்தது. இந்த ஜிஎஸ்டி வசூல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு நேர்மறையான பாதையை பிரதிபலிக்கிறது, இது வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் மிதமான இறக்குமதி நடவடிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் நாட்டின் நிதி ஆரோக்கியம் மற்றும் பொருளாதார மீட்பு முயற்சிகளுக்கு நல்ல அறிகுறியாகும். இது உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் மீள்தன்மையைக் குறிக்கிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!


ஜனவரி ஜிஎஸ்டி வசூல்

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி சட்டம் 2017 இன் விதிகளின்படி ஜிஎஸ்டியை செயல்படுத்துவதால் வருவாய் இழப்புக்கு உள்ளாகும் மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சரை தலைவராக கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

இதன்பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலின்படி மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளன. கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 21 ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நிலையான கழிவு என்றால் என்ன? ரூ.75,000 கூடுதல் வருமான வரி சலுகை யாருக்கு?
 

Latest Videos

click me!