வருமானவரி தாக்கல் செய்யும் போது சரியான வரி முறையைத் தேர்ந்தெடுத்து, 80C போன்ற அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தி வரியை எவ்வாறு சட்டப்படி சேமிப்பது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
வருமானவரி தாக்கல் (Income Tax Return - ITR) செய்யும் காலம் வந்துவிட்டால், பெரும்பாலானோருக்கு ஒரு கேள்விதான் இருக்கும். "எப்படி சட்டப்படி வரியை குறைக்கலாம்? அதிக ரிட்டர்ன்ஸ் பெற முடியுமா?" என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். உண்மையில், சரியான திட்டமிடலுடன் வருமானவரி தாக்கல் செய்தால் தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில், அதிகமாக பிடிக்கப்பட்ட வரியையும் (TDS) ரிட்டர்ன்ஸாகப் பெறலாம்.
29
புதிய வரி முறைதானா? பழைய வரி முறைதானா?
வரி தாக்கல் செய்யும் முன் முதலில் நீங்கள் எந்த வரி முறையை (New Tax Regime அல்லது Old Tax Regime) தேர்வு செய்வது உங்களுக்கு லாபம் என்பதை கணக்கிட வேண்டும். சம்பளம் மட்டுமே பெறுபவர்கள், அதிக முதலீடு அல்லது கழிவுகள் (Deductions) இல்லாதவர்கள் புதிய வரி முறையில் பயன் அடையலாம். ஆனால் PPF, ELSS, வாழ்க்கை காப்பீடு, வீட்டு கடன் போன்ற முதலீடுகள் அதிகமாக இருந்தால் பழைய வரி முறை சிறந்ததாக இருக்கலாம்.
39
அனைத்து வருமானங்களையும் சரிபாருங்கள்
சம்பள வருமானம் மட்டுமல்லாமல் வங்கி வட்டி, Fixed Deposit வட்டி, வாடகை வருமானம், பங்குச் சந்தை லாபம், மியூச்சுவல் ஃபண்ட் லாபம் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் சரியாகக் குறிப்பிட வேண்டும். இதை மறைத்தால் பின்னர் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது.
வரி தாக்கல் செய்வதற்கு முன் Form 26AS மற்றும் Annual Information Statement (AIS) ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். இதில் உங்கள் பெயரில் பிடிக்கப்பட்ட TDS, வங்கி வட்டி, முதலீட்டு விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். இவை ITR-ல் உள்ள தகவல்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
59
கழிவுகளை (Deductions) முழுமையாக பயன்படுத்துங்கள்
பழைய வரி முறையைத் தேர்வு செய்பவர்கள் வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கழிவுகளைப் பெறலாம்.
80C – PPF, ELSS, EPF, LIC உள்ளிட்ட முதலீடுகள்.
80D – மருத்துவ காப்பீட்டு பிரீமியம்.
80G – அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய நன்கொடை.
வீட்டுக் கடன் வட்டி உள்ளிட்ட தகுதியான சலுகைகளையும் மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
69
TDS அதிகமாக பிடிக்கப்பட்டிருந்தால் ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்
பலருக்கு நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தேவைக்கு அதிகமாக TDS பிடித்திருக்கும். வருமானவரி தாக்கல் செய்யாமல் விட்டால் அந்த தொகையை திரும்பப் பெற முடியாது. சரியான தகவல்களுடன் ITR தாக்கல் செய்தால், உங்களுக்கு உரிய ரீஃபண்ட் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
79
சரியான ITR படிவத்தைத் தேர்வு செய்யுங்கள்
ITR-1, ITR-2, ITR-3 போன்ற பல்வேறு படிவங்கள் உள்ளன. உங்கள் வருமானத்தின் தன்மைக்கு ஏற்ப சரியான படிவத்தை தேர்வு செய்வது அவசியம். தவறான படிவத்தில் தாக்கல் செய்தால் மீண்டும் திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
89
கடைசிநாளுக்காக காத்திருக்க வேண்டாம்
கடைசி நேரத்தில் வருமானவரி தாக்கல் செய்யும்போது இணையதள நெரிசல், ஆவணப் பிழைகள், OTP தாமதம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே முன்கூட்டியே தாக்கல் செய்தால் தவறுகளைத் திருத்தவும் போதுமான நேரம் கிடைக்கும்.
E-Verification செய்ய மறக்காதீர்கள்
ITR தாக்கல் செய்த பிறகு E-Verification செய்வது கட்டாயம். இதை செய்யாமல் விட்டால் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்கு செல்லுபடியாக கருதப்படாது. ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது வங்கி கணக்கு மூலம் இதை எளிதாக முடிக்கலாம்.
99
பணத்தை சேமிக்கவும் உதவும்
வருமானவரி தாக்கல் என்பது வெறும் சட்டப்பூர்வ கடமை மட்டுமல்ல; சரியான திட்டமிடலின் மூலம் பணத்தை சேமிக்கவும் உதவும் ஒரு வாய்ப்பாகும். வருமான விவரங்களை முழுமையாக பதிவு செய்து, பொருத்தமான வரி முறையைத் தேர்வு செய்து, கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினால் தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில், அதிகமாக பிடிக்கப்பட்ட TDS-ஐ ரிட்டர்ன்ஸாகப் பெற்று உங்கள் நிதி மேலாண்மையை மேலும் வலுப்படுத்தலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.