இந்தியக் குடும்பங்களில், குறிப்பாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடம் இருக்கும் ஆகச்சிறந்த பொருளாதாரப் பாதுகாப்பு 'தங்கம்' மட்டும்தான். அவசர மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்விக்கட்டணம், விவசாயம், அல்லது சிறு தொழில் முதலீடு என எந்தவொரு நெருக்கடி நிலை வந்தாலும், நம்மைக் கைதூக்கி விடுவது வீட்டில் இருக்கும் நகைகள்தான். "அவசரத் தேவைக்குத்தானே அடகு வைக்கிறோம், கையில் பணம் வந்ததும் மீட்டுவிடலாம்" என்ற நம்பிக்கையில்தான் பலரும் நகைக் கடன்களுக்குச் செல்கிறார்கள்.
ஆனால், தற்போதைய எதார்த்த சூழல் மிகக் கொடூரமாக இருக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், வட்டிக்கு மேல் வட்டி குட்டி போட்டு, அசல் தொகையை விட வட்டி அதிகமாகி, கடைசியில் "உங்கள் நகை ஏலத்திற்கு வரப்போகிறது" என்ற வங்கியின் நோட்டீஸ் வரும்போதுதான் பலருக்கும் தலைசுற்றலே ஆரம்பிக்கிறது. உங்களின் வியர்வைத் துளிகளால் வாங்கிய தங்கம், உங்களை அறியாமலேயே ஏல மேடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மன உழைச்சல்?
கவலைப்படாதீர்கள்! உழைத்துச் சேர்த்த நகையை எந்தக் சூழ்நிலையிலும் ஏலத்திற்கு விடாமல், மிக எளிதாக, புத்திசாலித்தனமாக எப்படி மீட்கலாம் என்பதற்கான விரிவான, சாமானிய மக்களுக்கான எளிய பொருளாதார வழிகாட்டி இதோ.