முதலீட்டுகள் சரியாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முதல் படி சரியான நாமினியை நியமிப்பதுதான். ஆனால், முதலீட்டுக்கு எத்தனை நாமினிகளை நியமிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, முதலீட்டிற்குத் தேவைப்படும் நாமினிகளின் எண்ணிக்கை. இரண்டாவது, நிதி நிறுவனம் அல்லது முதலீடு செய்யப்படும் பிற நிறுவனம் அனுமதிக்கும் நாமினிகளின் எண்ணிக்கை.
நடைமுறையில் உள்ள வங்கி நெறிமுறைகளின்படி, வங்கிக் கணக்குகள் மற்றும் டெபாசிட்களுக்கு ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க அனுமதிக்கின்றன. இதனால், ஒரு அக்கவுண்ட்டில் ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க முடியும். ஆனால், நாமினிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை நாமினியாக பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கலாம்.