பொதுவாக, தினசரி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்பு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம். உதாரணமாக, ஒரு வங்கியின் ஏடிஎம்மில் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.40,000 எடுக்கலாம், மற்றொரு வங்கி ரூ.50,000 வரம்பை நிர்ணயிக்கலாம். இந்த லிமிட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், உங்கள் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ சாத்தியமான மோசடிகளைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் வரம்பை விட உங்களுக்கு அதிக பணம் தேவைப்பட்டால், நீங்கள் அடுத்த நாளுக்காக காத்திருக்க வேண்டும் அல்லது பெரிய அளவில் பணம் எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பெரிய தொகைகளை நேரடியாக எடுக்கும்போது, விதிகள் வேறுபட்டவையாக உள்ளது. பெரும்பாலான வங்கிகள் நேரில் பணம் எடுப்பதற்கு அதிக வரம்புகளைக் கொண்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.