ஜிஎஸ்டி துறை உங்கள் வங்கிக் கணக்கை முடக்கியதா? மீண்டும் திறக்க என்ன செய்யலாம்? எளிய விளக்கம் இதோ

Published : Nov 23, 2025, 07:09 AM IST

ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 83-ன் கீழ், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் வங்கி கணக்குகளை முடக்கலாம். இது போலியான ஐடிசி கோருதல் போன்ற காரணங்களுக்காக செய்யப்படுகிறது. இதுகுறித்த முழுமையான விளக்கத்தை இப்பதிவில் காணலாம்.

PREV
13
ஜிஎஸ்டி கணக்கு முடக்கம்

ஜிஎஸ்டி விதிகளின் கீழ், வரி ஏய்ப்பு அல்லது பெரிய நிதி முறைகேடு ஏற்பட்டதாக சந்தேகம் இருந்தாலே, விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேலையிலும் அதிகாரிகள் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். இது பலருக்கும் தெரியாத ஒரு சட்ட உரிமையாகும். 

மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 83 மற்றும் விதி 159 ஆகியவை இந்த நடவடிக்கைக்கு சட்ட அடிப்படை வழங்குகின்றன. அரசு வருவாய் பாதுகாப்பதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டாலும், தவறான முடக்கம் ஏற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

23
வங்கிக் கணக்கு

பொதுவாக இந்த கணக்கு முடக்கம் மிகவும் தீவிரமான சந்தேக நிலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதில் முக்கியமான காரணங்கள் பின்வருமாறு, அவை போலியான உள்ளீட்டு வரிக் கடன் (ITC) கோருதல், பொருட்களை வழங்காமல் பில் வெளியிடுதல், வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டி வசூலித்து அதை அரசுக்குச் செலுத்தாதது, காகித நிறுவனங்கள் மூலம் மோசடி செய்தல், அல்லது விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பில் பின்வாங்குதல் ஆகியவை அடங்கும். 

இதுபோன்ற சூழ்நிலையில் அதிகாரிகள் கணக்கை முடக்கி, பண ஓட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவர். வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட தகவல் பொதுவாக வங்கி அறிவிப்பின் மூலம் முதலில் தெரிய வரும். கூடுதலாக, ஜிஎஸ்டி போர்டல் அல்லது நோட்டீஸ் மூலமாகவும் தகவல் வழங்கப்படும்.

33
ஜிஎஸ்டி உதவி தீர்வு

இந்த நிலை ஏற்பட்டால், அதை மீட்க சட்ட ரீதியான வழிமுறைகள் உள்ளன. கணக்கு முடக்கப்பட்ட 7 நாட்களுக்கு GST DRC-22A படிவம் மூலம் எதிர்ப்புக் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். உங்கள் கணக்கைப் பிறப்பிக்க தேவையான விளக்கங்களும் ஆதாரங்களும் இணைக்கப்பட வேண்டும். சில சமயங்களில் வங்கிக் கணக்கை விடுவிப்பதற்கு பதிலாக வங்கி உத்தரவாதம் அல்லது சொத்து பத்திரத்தை வழங்குவது வழக்கம். 

இறுதியாக, அதிகாரிகள் தீர்மானம் மாற்ற மறுத்தால், உயர் நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. நீதிமன்றங்கள் பெரும்பாலும் வணிக செயல்பாடுகளை பாதிக்கும் அநியாயத் தடைகளைத் திருத்துவதில் முன்வருகின்றன. எனவே, பயப்பட வேண்டாம். சட்டம் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories