சர்வதேச பதற்றங்களால் உயர்ந்த தங்கம் விலை, தற்போது சவரனுக்கு ரூ.2,640 வரை குறைந்துள்ள போதிலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நகை வாங்கத் தயங்குகின்றனர்.
தங்கம் வெள்ளி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி நகைப்பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் காரணமாக கிடு கிடுவென விலை உயர்ந்து வந்தது. போர் பதற்றம் காரணமாக விலை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.2640 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
25
நேற்று தங்கம் விலை
நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
35
இன்று சரசரவென குறைந்த தங்கம்
இந்நிலையில் இன்றைய (மார்ச் 21) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,858ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 118,864ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.250,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
55
தேர்தல் நடத்தை விதிகள் அவதி
ஆனால் தங்கம், வெள்ளி விலை குறைவை நகை பிரியர்கள் கொண்டாட முடியவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பெரும் தொகையை எடுத்துச் செல்ல அஞ்சி வருகின்றனர். இத்தகைய கெடுபிடிகளால் நகை கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.