கடந்த ஒறாண்டாக தங்கம் வாங்க நினைப்பவர்களின் மனதில் ஒரே கேள்வி – “இன்னும் உயருமா? இல்லை குறையுமா?” உலக சந்தையில் பல மாற்றங்கள் நடந்தாலும், தங்க விலை ஏற்றத்துடன்–சரிவுடன் காட்சியளித்து வந்தது. இந்த நிலை தொடருமா என்பதே வாங்குபவர்களுக்கு பெரிய குழப்பமாக இருந்தபோது, பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் வழங்கிய தகவல் பலருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் ஏன் இவ்வளவு உயர்ந்தது?
கொரோனா காலத்திலிருந்து தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து பலமடைந்தது. 2025 ஆரம்பம் வரை தங்கம் வேகமாக ஏறி, சில மாதங்களில் ரூ.10,000–12,000 வரை கூட அதிகரித்தது. ஆனால் பின்னர் எதிர்பாராத வீழ்ச்சி, மீண்டும் சிறிய உயர்வு என ஊசலாட்டம் தொடர்ந்தது. இதனால்தான் பொதுமக்கள் வாங்க அஞ்சும் நிலை உருவானது.