Gold Price Hike: விண்ணை முட்டும் தங்கம் விலை.! இறக்குமதி வரி 15% உயர்வு! இனி தங்கம் வாங்க முடியுமா?

Published : May 13, 2026, 05:32 PM IST

Gold Import Duty Hike India 2026 : தங்கத்தின் இறக்குமதி வரியை மத்திய அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
17
தங்கம் இறக்குமதி வரி உயர்வு

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6%ல் இருந்து 15% ஆக உயர்த்தியதால், தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், நகை விலை கடுமையாக உயரும், கடத்தல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

27
தங்கம் விலை கணிசமாக உயரும்

இறக்குமதி வரி உயர்வால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை மாறாவிட்டாலும், இந்தியாவில் அதன் விலை உடனடியாக உயரும். 10 கிராம் தங்கத்தின் மீது சுமார் ₹13,000 முதல் ₹14,000 வரை கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர, 3% GST மற்றும் செய்கூலி (Making Charges) போன்றவையும் சேரும்போது, இறுதி விற்பனை விலை நுகர்வோருக்கு பெரும் அதிர்ச்சியைத் தரும்.

37
நிபுணர்கள் கணிப்பு

அரசின் இந்த முடிவு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) 10 கிராம் தங்கம் விலை 1.63 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. வெள்ளி கிலோவுக்கு 3 லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. இந்த வரி உயர்வால், 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 27,000 ரூபாய் வரை நேரடியாக அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் இனி 'லைட் வெயிட்' நகைகளை மட்டுமே வாங்குவார்கள் என நகைக்கடைக்காரர்கள் கவலைப்படுகின்றனர்.

47
கள்ளச் சந்தை உருவாகும் அபாயம்

அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கவுன்சில் (GJC) இந்த முடிவு குறித்து கவலை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ராஜேஷ் ரோகடே, "இந்த அளவுக்கு வரி உயர்த்தப்பட்டால், கள்ளச் சந்தை உருவாகி, நாட்டில் தங்கக் கடத்தல் மீண்டும் அதிகரிக்கும்" என்று எச்சரித்துள்ளார். சட்டப்பூர்வமாக தங்கம் வாங்குவது காஸ்ட்லியாகும்போது, ஒரு மாற்றுப் பொருளாதாரம் உருவாகும் அபாயம் உள்ளது. இது அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

57
கடுமையாக சரிந்த பங்குகள்

இந்த வரி உயர்வு பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை. டைட்டன் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகள் 9% வரை சரிந்தன. தங்கம் விலை கடுமையாக உயரும்போது, நகைகளுக்கான தேவை குறையும். இது நிறுவனங்களின் லாபத்தை நேரடியாக பாதிக்கும் என முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

67
அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் அரசு

தற்போதைய நிலையை பொருளாதாரத்திற்கான ஒரு 'லைவ் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்' என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 87% இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 107 டாலரை எட்டியுள்ளது. எனவே, டாலர் செலவைக் குறைக்க, தங்கம் போன்ற அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை அரசு கட்டுப்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் மக்கள் தங்கம் வாங்குவதை தற்போதைக்கு தள்ளிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

77
வரும் மாதங்களில் தெரியவரும்

"அசாதாரண வெளிப்புறச் சூழல்கள்" காரணமாகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் குறைத்து, எண்ணெய், பாதுகாப்பு, உணவுப் பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளுக்கு அந்நியச் செலாவணியை ஒதுக்குவதே இதன் நோக்கம். இந்த முடிவு பொருளாதாரத்திற்கு ஸ்திரத்தன்மையைக் கொடுக்குமா அல்லது புதிய சிக்கல்களை உருவாக்குமா என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories