தொடரும் தங்த்தின் விலை உயர்வு
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் எப்போதும் இல்லாத அளவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. உலக நாடுகளிலையே இந்தியாவில் தான் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது. எதிர்கால சேமிப்பிற்காகவும், தங்கள் பெண் குழந்தை திருமணத்திற்காகவும் அதிகமான அளவு தங்கம் வாங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்றுக்கு இன்று 360 ரூபாய் உயர்ந்துள்ளது.