மார்ச் 1 முதல் வங்கி, வரி, பங்குச்சந்தை உள்ளிட்ட பல துறைகளில் புதிய நிதி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் நிதித் திட்டமிடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மார்ச் 1 முதல் பல முக்கிய நிதி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. மத்திய பட்ஜெட் 2026-27 மற்றும் ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்கள் காரணமாக வங்கி சேவைகள், வரி தொடர்பான நடைமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிதியாண்டின் கடைசி மாதம் தொடங்கியுள்ளதால், உங்கள் பணத்திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
25
மகாவீர் ஜெயந்தி பொதுவிடுமுறை
மார்ச் 31 அன்று மகாவீர் ஜெயந்தி பொதுவிடுமுறை இருந்தாலும், அரசுத் தொடர்புடைய பரிவர்த்தனைகள் நடைபெறவிருக்கும் வங்கிகள் திறந்திருக்கும் என்று ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. இதனால் 2025-26 நிதியாண்டுக்கான வரி வசூல் மற்றும் அரசுப் பணப்பரிவர்த்தனைகள் சீராக முடிக்கப்படும்.
35
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி மோசடிகளை கட்டுப்படுத்த TRAI, பங்கு வர்த்தகர்களுக்கான ‘1600’ என்ற புதிய அழைப்பு எண் வரிசையை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் உண்மையான அழைப்புகளையும் மோசடி அழைப்புகளையும் எளிதில் பிரித்தறியலாம்.
வருமான வரி தொடர்பாகவும் பெரிய சலுகை கிடைத்துள்ளது. திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை (திருத்தப்பட்ட ITR) தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்பு செய்த தவறுகளை சரிசெய்ய கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.
55
கேஸ் சிலிண்டர் விலை
மேலும், FASTag விதிகளில் தளர்வு, வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஜெட் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற மாற்றங்கள் மார்ச் மாதத்தில் தாக்கம் ஏற்படுத்தும். குறிப்பாக எரிபொருள் விலை உயர்வு விமான கட்டணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் செலவுத்திட்டத்தை கவனமாக திட்டமிடுவது முக்கியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.