ஆத்தாடி.. கர்நாடகா வங்கி ஊழியர் செய்த தவறு.. ஒரே நொடியில் ஒரு லட்சம் கோடி பனால்!

Published : Nov 13, 2025, 04:28 PM IST

கர்நாடகா வங்கி ஊழியர் செய்த ஒரு பெரிய தவறால், வங்கியின் ஒரு லட்சம் கோடி ரூபாய் தவறுதலாக ஒரு செயலற்ற கணக்கிற்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 2023-ல் நடந்த நிலையில், சுமார் 3 மணி நேரத்தில் பணம் மீட்கப்பட்டது.

PREV
14
ஒரு லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை

கர்நாடகா வங்கி நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாகும். மங்களூரை தளமாகக் கொண்ட இந்த வங்கி, நாடு முழுவதும் செயல்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 1,000 கிளைகளைக் கொண்ட கர்நாடகா வங்கி, ஒவ்வொரு பரிவர்த்தனையையும் மிகவும் கவனமாக செய்கிறது. இது இரண்டு முறை குறுக்கு சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், ஊழியர்களின் பிழை காரணமாக, கர்நாடகா வங்கி அதன் அனைத்து வைப்புத்தொகைகளையும் நிதிகளையும் இழந்தது. 1 லட்சம் கோடி ரூபாய் தவறுதலாக வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

24
கர்நாடகா வங்கி ஊழியர்களின் பெரிய தவறு

வங்கி ஊழியர் ஒருவர் செய்த தவறு காரணமாக,  வங்கியில் பல்வேறு வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த மொத்த தொகையும் வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக மணி கண்ட்ரோல் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொகை ஒரே பரிவர்த்தனையில் மாற்றப்பட்டது. வங்கியில் கவனக்குறைவால் ஏற்படும் இதுபோன்ற தவறுகள் Fat Finger Error என்று அழைக்கப்படுகின்றன.

34
3 மணிநேரத்தில் மீட்பு

ஒரு லட்சம் கோடி ரூபாய் செயலற்ற கணக்கிற்கு மாற்றப்பட்டது. கணக்கு செயலற்ற நிலையில் இருந்ததால் இந்தப் பணம் எந்த வகையிலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சரியாக 3 மணி நேரத்திற்குப் பிறகு பணம் மீடகப்பட்டது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 8, 2023 அன்று நடந்தது. இந்தப் பணம் மாலை 5.17 மணிக்கு செயலற்ற கணக்குக்கு மாற்றப்பட்டது. தவறு நடந்தது தெரிந்த ஊழியர்கள் 20.09 க்கு பணத்தை மீட்டனர்.

44
ரிசர்வ் வங்கியின் கவலை

இந்தப் பணம் தவறுதலாக மாற்றப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக மாற்றப்பட்டதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றம் 2023 ஆம் ஆண்டு நடந்தது. இதுபற்றி கர்நாடகா வங்கி விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆர்பிஐ கேட்டுக்கொண்டது. வங்கியின் ஐடி துறை 2024 மார்ச் 15ஆம் தேதி விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது. மார்ச் 28 அன்று, ஒரு PPT மூலமாகவும் விளக்கமளித்தது.

இருப்பினும், கவனக்குறைவாக நடந்த தவறு, அதைச் சரிசெய்வதில் ஏற்பட்ட தாமதம் போன்றவை குறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories