புதிய விதிப்படி, வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் (SMS) அலெர்ட்கள் வரை இலவசமாகப் பெறலாம். ஆனால், 30 SMS-ஐ தாண்டி வரும் ஒவ்வொரு செய்திக்கும் ரூ.0.15 கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, 30 இலவச செய்திகளைத் தாண்டி வரும் UPI, NEFT, RTGS, IMPS பரிவர்த்தனைகள், ATM பணவாங்குதல், ரொக்க பரிவர்த்தனை, காசோலை டெபாசிட், டெபிட்-கிரெடிட் கார்டு பயன்பாடு போன்றவற்றுக்கான அலெர்ட்கள் அனைத்திலும் இந்த கட்டணம் பொருந்தும்.