இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு, 1) விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். 2) குடும்ப ஆண்டு வருமானம்; ரூ. 3, 00, 000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 3) விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். 4) குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.