Coconut Shell Business : நாம சும்மா தூக்கிப் போடுற சில பொருட்கள்ல பெரிய பிசினஸ் வாய்ப்பு இருக்குனு தெரியுமா? அப்படி நாம வேஸ்ட்னு நினைக்கிற தேங்காய் சிரட்டையை வெச்சு எப்படி ஒரு லாபகரமான தொழில் செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
தேங்காய் சிரட்டையை எரித்து தயாரிக்கப்படும் கரிக்கு 'கோக்கனட் ஷெல் சார்க்கோல்' என்று பெயர். இது பல தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. குறிப்பாக, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிப்பில் இந்த கரியை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், ஃபில்டர்கள், கேஸ் மாஸ்க்குகள் மற்றும் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் இதற்கு நல்ல தேவை உள்ளது. அதனால், சிறிய அளவில் தயாரித்தாலும் நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும்.
25
இந்தத் தொழிலைத் தொடங்க என்ன தேவை?
தேங்காய் கரி தொழிலைத் தொடங்க பெரிய முதலீடு தேவையில்லை. ஒரு சிறிய இடம், தேங்காய் சிரட்டைகள், அவற்றை எரிக்கத் தேவையான இயந்திரம் இருந்தால் போதும். உள்ளூர் சந்தைகள், ஹோட்டல்கள், தேங்காய் விற்பனை நிலையங்களிலிருந்து சிரட்டைகளை சேகரிக்கலாம். சாதாரண தீயில் எரிப்பதை விட, இயந்திரம் மூலம் தயாரித்தால் கரியின் தரம் சிறப்பாக இருக்கும்.
35
தேங்காய் கரியின் பயன்கள் என்ன?
தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கரிக்கு பல பயன்கள் உள்ளன. ஃபேஸ் பேக்குகள், ஸ்கின்கேர் பொருட்கள், சோப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும், தண்ணீர் சுத்திகரிப்பு ஃபில்டர்கள், ஏர் பியூரிஃபையர்கள், கேஸ் மாஸ்க்குகள் மற்றும் சில ராணுவ உபகரணங்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். இதனால், சந்தையில் இதற்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கும்.
தயாரான கரியை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கலாம். ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் சப்ளை செய்யலாம். இப்போதெல்லாம் பலர் இந்த தயாரிப்பை ஆன்லைன் மூலமாகவும் விற்கிறார்கள். சரியான மார்க்கெட்டிங் செய்தால் பெரிய நிறுவனங்களிடமிருந்தும் ஆர்டர்கள் வர வாய்ப்புள்ளது. தற்போது ஒரு கிலோ தேங்காய் கரி சுமார் ₹50 முதல் ₹70 வரை விற்கப்படுகிறது.
55
இந்தத் தொழிலில் உள்ள சிறப்பு வாய்ப்புகள்
பொதுவாக வீணாகக் கருதப்படும் தேங்காய் சிரட்டைகளைப் பயன்படுத்துவதால், இந்தத் தொழில் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. கிராமப்புறங்களில் கூட இந்தத் தொழிலை எளிதாகத் தொடங்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இணைந்து தொடங்கினால் நல்ல வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது. குறைந்த முதலீடு மற்றும் எப்போதும் இருக்கும் தேவை காரணமாக இது ஒரு சிறந்த சிறு தொழிலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.