தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRCL) தயாரித்து வரும் திட்ட அறிக்கையின்படி, இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் தொடங்கி பூந்தமல்லி, பரந்தூர் புதிய விமான நிலையம், சித்தூர், கோலார் வழியாக பெங்களூருவின் பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்ஃபீல்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைய வாய்ப்புள்ளது.
பெங்களூரு நகருக்குள் நுழையும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒயிட்ஃபீல்டு முதல் பையப்பனஹள்ளி வரை சுமார் 12 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை, பெங்களூரு மேலும் பொருளாதார வளர்ச்சியடையும்
இந்த புல்லட் ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களும் வணிக ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் இன்னும் மேலும் வளர்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.