HRA Rules: கணவன், மனைவி இருவரும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்து, ஒரே நகரத்தில் அரசு குடியிருப்பில் வசித்தால், இருவருக்கும் தனித்தனியாக வீட்டு வாடகைப்படி (HRA) கிடைக்குமா? இதுகுறித்து மத்திய அரசு தற்போது முழுமையான விளக்கம் அளித்துள்ளது.
8வது சம்பள கமிஷன்: HRA விதிகள் குறித்த முக்கிய அப்டேட்
நாடு முழுவதும் 8வது சம்பள கமிஷன் குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) தொடர்பான பல விஷயங்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் HRA விதிகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, ஒரே அரசு குடியிருப்பில் வசித்தால், இருவருக்கும் தனித்தனியாக HRA கிடைக்குமா என்பது பலரின் கேள்வியாக இருந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது தெளிவான விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதில் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.
26
மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி
மாநிலங்களவை உறுப்பினர் சுமித்ரா எழுப்பிய கேள்விக்கு, நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் தனது பதிலில், 'ஏதேனும் காரணங்களால் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களின் சொந்த வாடகை வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கவே இந்தத் தொகை வழங்கப்படுகிறது' என்று குறிப்பிட்டார்.
36
கணவன் - மனைவி ரெண்டு பேருமே அரசு ஊழியரா?
கணவன், மனைவி இருவரும் அரசுப் பணியில் இருந்து, ஒரே இடத்தில் பணிபுரியும் போது, அவர்களில் ஒருவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டால், அந்தக் குடும்பம் முழுவதுமே அரசு குடியிருப்பு வசதியைப் பெற்றதாகக் கருதப்படும். இந்தச் சூழலில், மற்றவருக்குத் தனியாக வீட்டு வாடகைச் செலவு இருக்காது. எனவே, அவருக்கு HRA பலன் கிடைக்காது.
மாநிலங்களவை உறுப்பினர் சுமித்ராவின் கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அரசு குடியிருப்பு கிடைக்காத மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் வாடகைச் செலவுகளைச் சமாளிப்பதற்காக மட்டுமே வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
56
ஒருவருக்கு மட்டுமே பலன் கிடைக்கும்
கணவன், மனைவி இருவரும் அரசுப் பணியில் இருந்து, ஒரே இடத்தில் பணிபுரியும் போது, அவர்களில் ஒருவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டால், அந்தக் குடும்பம் முழுவதுமே அரசு குடியிருப்பு வசதியைப் பெற்றதாகக் கருதப்படும். இதனால், மற்றவருக்குத் தனியாக வீட்டு வாடகைச் செலவு இல்லாததால், அவருக்கு HRA பலன் கிடைக்காது.
66
ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு? அரசின் முடிவு என்ன?
நிதி அமைச்சகத்தின் இந்த பதிலில் இருந்து ஒன்று தெளிவாகிறது. கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, ஒரே அரசு குடியிருப்பில் (குவார்ட்டர்ஸ்) வசித்தால், யாருடைய பெயரில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதோ, அவருடைய சம்பளத்தில் இருந்து மட்டுமே உரிமக் கட்டணம் (License Fee) கழிக்கப்படும். மற்றவருக்கு வீட்டு வாடகைப்படி (HRA) கிடைக்காது. மேலும், இந்த விதியில் தளர்வு அளிப்பது குறித்தோ அல்லது இருவருக்கும் HRA வழங்குவது குறித்தோ அரசு தற்போது பரிசீலிக்கவில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.