இப்போ ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிடுச்சு. டீசல் விலையும் ராக்கெட் வேகத்துல ஏறுது. ஆனா, 76 வருஷத்துக்கு முன்னாடி, 1950-ல பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ இருந்துச்சுன்னு தெரியுமா?
அப்போ டீசல் விலை இன்னும் குறைவு. ஒரு லிட்டர் டீசல் 20-லிருந்து 30 பைசாவுக்கு விற்பனை செஞ்சாங்க. சில அறிக்கைகளின்படி, 1947-ல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வெறும் 27 பைசாவா இருந்துச்சு. அப்போதைய அரசாங்கம் 'விலைக் கட்டுப்பாட்டு அமைப்பு' (Price Control System) மூலமா விலையை நிர்ணயம் செஞ்சதுதான் இதற்கு காரணம்.
25
அப்போ வரிகளும் அதிகமா இல்லை.!
1950-கள்ல, அரசாங்கம்தான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செஞ்சது. இந்த முறைக்கு 'நிர்வாக விலை நிர்ணய அமைப்பு' (Administered Pricing Mechanism - APM) என்று பெயர். இதனால, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் நேரடியாக மக்களை பாதிக்கல. அதுமட்டுமில்லாம, இப்போ இருக்கிற மாதிரி அப்போ வரிகளும் அதிகமா இல்லை.
35
1989-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை
அரசு பதிவுகளின்படி, 1989-ல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹8.50, டீசல் விலை ₹3.50-ஆக இருந்துச்சு. 1990, 2000, 2010-க்குப் பிறகு விலைகள் வேகமாக மாற ஆரம்பிச்சது. ஜூன் 2010-ல் பெட்ரோல் விலையும், அக்டோபர் 2014-ல் டீசல் விலையும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட ஆரம்பிச்சது.
இப்போ, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) தினமும் விலையை மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தை விலை, கச்சா எண்ணெய் விலை, டாலர்-ரூபாய் மதிப்பு, சரக்குக் கட்டணம், சுத்திகரிப்பு செலவுகள், மத்திய மற்றும் மாநில அரசு வரிகள் என பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.
55
விலை உயர்வுக்கு காரணம்
ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலின் சில்லறை விலை, கச்சா எண்ணெய் விலையை விட அதிகமாகவே இருக்கும். காரணம், இதில் சுத்திகரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள், டீலர் கமிஷன், மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி என பலவும் அடங்கும். இதனால்தான், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் முழுப் பலன் நமக்கு கிடைப்பதில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.