இந்திய ரயில்வேயின் FTR சேவையின் மூலம், திருமணம் போன்ற பெரிய குழு நிகழ்ச்சிகளுக்கு ஒரு முழு கோச் அல்லது ரயிலையே முன்பதிவு செய்யலாம். இந்த வசதி குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதனைப் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
பெரிய குடும்ப நிகழ்ச்சிகள், யாத்திரைகள் அல்லது நண்பர்கள் குழு சுற்றுலா என்றால் பொதுவாக பஸ் அல்லது கார்கள் தான் தேர்வு செய்யப்படுகின்றன. ஆனால் இந்திய ரயில்வேயில் முழு கோபங்கள் அல்லது ஒரு முழு ரயிலையே முன்பதிவு செய்யும் வசதி இருப்பது பலருக்கு தெரியாது. குழுவாகப் பயணம் செய்ய விரும்புவோருக்கு இது சுவாரஸ்யமான மற்றும் சௌகரியமான தேர்வாக உள்ளது.
25
குழு பயண ரயில் வசதி
இந்த சேவை ஐஆர்சிடிசியின் முழு கட்டண விகிதம் (FTR) முறையின் கீழ் வழங்கப்படுகிறது. ftr.irctc.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். திருமணம், கல்வி பயணம், ஆன்மிக யாத்திரை அல்லது தனியார் நிகழ்ச்சிகள் போன்ற காரணங்களுக்காக இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கேற்ப ஒரு கோச்சை மட்டுமே அல்லது முழு ரயிலையே தேர்வு செய்யலாம்.
35
ரயில்வே டெபாசிட் தொகை
ஒரு கோச்சை முன்பதிவு செய்ய சுமார் ரூ.50,000 பாதுகாப்பு டெபாசிட் செலுத்த வேண்டும். முழு 18 கோச்சுகள் கொண்ட ரயிலை புக் செய்ய ரூ.9 லட்சம் டெபாசிட் தேவை. இது இறுதி கட்டணத்தில் சரிசெய்யப்படும் முன்பணம் ஆகும். சாதாரண டிக்கெட் கட்டணத்தை விட சுமார் 30% அதிக கட்டணம் விதிக்கப்படும். தூரத்தைப் பொறுத்து சேவை கட்டணமும் இருக்கும்.
முன்பதிவு செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்சம் 6 மாதங்களுக்கு முன்பே புக் செய்ய அனுமதி உண்டு. வந்தே பாரத், ராஜ்தானி போன்ற பிரீமியம் ரயில்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இந்த வசதியில் கிடைக்கும்.
55
தனியார் நிகழ்ச்சி ரயில்
பெரிய குழுவுடன் ஒரே ரயிலில், ஒரே இடத்தில் பயணம் செய்ய விரும்புவோருக்கு இது தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. ரயில்வே விதிமுறைகளை பின்பற்றி முன்பதிவு செய்தால், பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் பயணத்தை திட்டமிட முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.