மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் ஒரே சமயத்தில் வந்தது போல் மகிழ்ச்சியான செய்தி இது. தீபாவளி வரை புதிய டிஏ கிடைக்காது என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய அரசு தீபாவளிக்கு முன்பே அதாவது செப்டம்பர் மாதத்தில் டிஏ உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது, நிலுவைத் தொகையாக அந்த பணம் அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.