டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது ஆன்லைன் ஐஎம்பிஎஸ் (IMPS) கட்டணங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
இதுவரை மொபைல் ஆப் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் IMPS பரிமாற்றங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால், இனி பெரிய தொகையை அனுப்பும்போது சிறிய தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.