ஜனவரி 28 முதல் ஆதார் விதிகள் மாறுது.. இனி ஆதார் மையம் தேவையில்லை.. பெரிய அப்டேட்

Published : Jan 27, 2026, 05:35 PM IST

ஆதார் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதில் இருந்த சிக்கல்களுக்கு UIDAI தீர்வு கண்டுள்ளது. ஜனவரி 28, 2026 முதல், ஆதார் மையங்களுக்குச் செல்லாமல் எங்கிருந்தும் மொபைல் எண்ணை எளிதாகப் புதுப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

PREV
15
ஆதார் அப்டேட் விதிகள்

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் ஒரு அடையாள அட்டையை விட பல மடங்கு முக்கியமானதாக மாறியுள்ளது. வங்கி கணக்குகள், அரசு நலத்திட்டங்கள், ஆன்லைன் சேவைகள் என அனைத்திற்கும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியமாக உள்ளது. மொபைல் எண் செயல்பாட்டில் இல்லை ஓடிபி வராத பிரச்சனை, சேவைகள் தடைபடும் சூழ்நிலை போன்றவை பலருக்கும் தலைவலியாக இருந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

25
ஜனவரி 28, 2026 முதல் அமலுக்கு வரும் புதிய வசதி

UIDAI அறிவிப்பின்படி, 2026 ஜனவரி 28 முதல் ஆதார் மொபைல் எண் புதுப்பிப்புக்கு புதிய, நெகிழ்வான வசதி செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஆதார் சேவைகள் மேலும் எளிதாகவும், பயனர் நட்பாகவும் மாற்றப்படுகின்றன. இந்த முடிவு, பொதுமக்களின் தினசரி சிக்கல்களை குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

35
ஆதார் மையம் தேடி அலைய வேண்டாம்

இதுவரை ஆதார் மொபைல் எண்ணை மாற்ற அல்லது புதுப்பிக்க மக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. நீண்ட வரிசை, நேர விரயம், பயண சிரமம் ஆகியவை பலருக்கு தடையாக இருந்தன. புதிய அமைப்பின் மூலம், இந்த சார்பு பெரிதும் குறையும். பயனர்கள் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் தங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

45
ஓடிபி, வங்கி, அரசு சேவைகள் இனி எளிது

வங்கி பரிவர்த்தனைகள், மானியத் தொகைகள், ஓய்வூதியம், கல்வி உதவிகள் போன்ற பல சேவைகளுக்கு ஓடிபி சரிபார்ப்பு கட்டாயம். மொபைல் எண் மாறியவர்களுக்கும், பழைய எண்ணை புதுப்பிக்காதவர்களுக்கும் இந்த புதிய வசதி மிகப் பெரிய நன்மையாக இருக்கும். சேவைகள் தடைபடும் நிலை குறையும் என்பதால், பொதுமக்கள் நிம்மதியாக ஆதார் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்த முடியாது.

55
முதியவர்கள், கிராமப்புற மக்களுக்கு கூடுதல் பலன்

இந்த மாற்றம் குறிப்பாக மூத்த குடிமக்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் சிரமம் அனுபவிப்பவர்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும். ஆதார் மொபைல் செயலி இந்த வசதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி மூலம், ஆதார் சேவைகள் இன்னும் எளிமையாக இருக்கும். இது டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய இன்னொரு உறுதியான படியாக பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories