மத்திய நிதி அமைச்சகம் ஒரு ஆன்லைன் போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இதில் ஊழியர் சங்கங்கள் ஏப்ரல் 30, 2026 வரை தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். நவம்பர் 2025-ல் அறிவிப்பு வெளியான பிறகு, ஆணையம் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த செயல்முறைக்கு தாமதம் ஆனாலும், புதிய ஊதிய விகிதம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவைத் தொகை கிடைக்கும்
நிபுணர்களின் கணிப்புப்படி, 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம் ஜனவரி 1, 2026 முதலே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, அரசு முடிவெடுக்கத் தாமதித்தாலும், ஊழியர்களுக்கு அந்தத் தேதியிலிருந்து 'நிலுவைத் தொகை' (Arrears) கிடைக்கும். இந்தத் தேதிதான் 7வது ஊதியக் குழுவின் காலம் முடிவடையும் அதிகாரப்பூர்வ தேதியாகவும் கருதப்படுகிறது. அடுத்த 18 மாதங்கள் மத்திய அரசு ஊழியர்களின் நிதி எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.