பல்வேறு நகரங்களில் PNG வசதி இருந்தும், பலர் மானிய சிலிண்டரை பதுக்குகின்றனர். இதைத் தடுத்து, தேவையுள்ளவர்களுக்கு கேஸ் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால், சர்வதேச சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிலிண்டர் தேவை 75 லட்சத்திலிருந்து 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்க, மத்திய அரசு நிர்வாகம் 'சர்ச் ஆபரேஷன்' தொடங்கியுள்ளது.
கேஸ் சப்ளை துண்டிக்கப்படலாம்
ஆகவே உங்களிடம் இரண்டு இணைப்புகளும் இருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக உங்கள் LPG இணைப்பை அருகிலுள்ள விநியோகஸ்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள். விதிகளை மீறினால், உங்கள் கேஸ் சப்ளை துண்டிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.