ஜனவரி 1, 2026-க்கு முன்னும் பின்னும் ஓய்வு பெறுபவர்களுக்கு இடையில் எந்தப் பாகுபாடும் இல்லாமல், சமமான ஓய்வூதியத் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான எட்டாவது ஊதியக் குழு, தனது பணிகளை வேகப்படுத்தியுள்ளது.
டெல்லி கூட்டத்திற்குப் பிறகு, சென்னை, புதுச்சேரி, சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இந்த ஆணையம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும். 18 மாத கால அவகாசம் கொண்ட இந்த ஆணையம், அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதத்திற்குள் தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.