மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் வரைவு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், குறைந்தபட்ச சம்பளத்தை மூன்று மடங்காகவும், அதிகபட்ச சம்பளத்தை கணிசமாகவும் உயர்த்த சங்கங்கள் பரிந்துரைத்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு தொடர்பாக முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நியூடெல்லியில் வரைவு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் குறித்து பல்வேறு சங்கங்களிலிருந்து வந்துள்ள பரிந்துரைகள் தற்போது ஆராயப்படுகின்றன. இந்த முறை சம்பள உயர்வு பெரிய அளவில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
25
8வது ஊதியக் குழு
தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், அதிகபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.6,57,300 முதல் ரூ.8,12,500 ஆக உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளன. புதிய பிட்மென்ட் பேக்டர் மற்றும் சம்பள அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டால், உயர் அதிகாரிகளுக்கு கனிசமான உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
35
குறைந்தபட்ச சம்பளம்
அதே நேரத்தில், தாழ்நிலை பணியாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.18,000 முதல் ரூ.54,000 ஆக மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 3 என்ற பிட்மென்ட் பேக்டர் அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சம்பள வேறுபாட்டை குறைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச சம்பள விகிதம் 1:14 ஆக இருந்தது. புதிய பரிந்துரையில் அதை 1:8 அல்லது 1:9 ஆக குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சமநிலை வாய்ந்த சம்பள அமைப்பு கிடைக்கும் என சங்கங்கள் நம்புகின்றன.
55
8வது ஊதியக் குழு செயல்முறை
வரைவு குழு ஒரு வார காலத்தில் அனைத்து பரிந்துரைகளையும் ஆய்வு செய்து இறுதி அறிக்கையை தயாரிக்கும். பின்னர் அது 8வது ஊதியக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், இயக்குநர் மற்றும் துணை செயலாளர் போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 8வது ஊதியக் குழு செயல்முறை வேகமடைந்துள்ளதாக தெரிகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.