Post Office Schemes: பேங்க்கை விட 2% அதிக வட்டி தரும் 5 போஸ்ட் ஆபீஸ் பிளான்கள்.. முழு லிஸ்ட்!

Published : Apr 23, 2026, 09:07 PM IST

Post Office Scheme: குழந்தைகளின் எதிர்காலம் என்று வரும்போது எல்லாரும் பாதுகாப்பான வழியைத்தான் தேடுவாங்க. வங்கிகளை விட அதிக வட்டி கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் பிளான்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
சுகன்யா சம்ரித்தி யோஜனா
உங்களுக்கு 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை இருந்தால், இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஒரு சிறந்த தேர்வு. இதில் சுமார் 8.0% வட்டி கிடைக்கிறது. இது பெரும்பாலான வங்கி FD-க்களை விட அதிகம். வரிச் சலுகையும் உண்டு. மகளின் 18 வயதில், படிப்புச் செலவுக்காக பாதியை எடுத்துக்கொள்ளலாம்.
25
கிசான் விகாஸ் பத்ரா
நீங்க போடுற பணம் சில வருஷத்துல இரட்டிப்பாகணும்னு நினைச்சா, கிசான் விகாஸ் பத்ரா (KVP) பெஸ்ட். இப்போதைக்கு இதுல 7.5% வட்டி தராங்க. இந்தத் திட்டத்தில் உங்க பணம் வெறும் 115 மாதங்கள்ல, அதாவது சுமார் 9 வருஷம் 7 மாசத்துல, இரட்டிப்பாகிடும்னு கேரண்டி. குழந்தைகளின் பெரிய தேவைகளுக்கு இது ஒரு நல்ல வழி.
35
போஸ்ட் ஆபீஸ் RD-யில் சுமார் 6.7% வட்டி
ஒரேயடியா பெரிய தொகையை முதலீடு செய்ய முடியலையா? மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சும் ஒரு பெரிய நிதியை உருவாக்கலாம். போஸ்ட் ஆபீஸ் RD-யில் சுமார் 6.7% வட்டி கிடைக்குது. இது 5 வருஷ திட்டம். குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் போன்ற சின்னச் சின்ன செலவுகளுக்கு இது ஒரு உண்டியல் மாதிரி உதவும்.
45
வருமான வரியிலும் விலக்கு
ஒரே தடவை பணத்தைப் போட்டுட்டு, 5 வருஷத்துக்கு அதை அப்படியே விட்டுடணும்னு நினைக்கிற பெற்றோருக்கு இது நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (NSC). இதில் ஆண்டுக்கு 7.7% வட்டி சேரும். இது முழுசா பாதுகாப்பானது. இதில் முதலீடு செஞ்சா வருமான வரியிலும் விலக்கு கிடைக்கும்.
55
4% வட்டி கிடைக்கும்

உங்க குழந்தையின் பேர்ல போஸ்ட் ஆபீஸ்ல சேமிப்புக் கணக்கையும் தொடங்கலாம். இதுல வருஷத்துக்கு 4% வட்டி கிடைக்கும். இது குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்தே பணம் சேமிக்கிற பழக்கத்தை உருவாக்கும். தேவைப்படும்போது எப்போ வேணும்னாலும் பணத்தை எடுக்கலாம். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்கள் விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. சுகன்யா சம்ரித்தி, KVP, NSC போன்ற தபால் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்களை இந்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றியமைக்கலாம். முதலீடு செய்வதற்கு முன், உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தற்போதைய விகிதங்கள் மற்றும் விதிகளை முழுமையாகச் சரிபார்க்கவும். சந்தை அபாயங்கள் மற்றும் தனிப்பட்ட நிதி நிலையின் அடிப்படையில், முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன், ஒரு சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories