நகைக்கடன்கள் பொதுவாக 3 முதல் 12 மாதங்கள் வரையிலான குறுகிய கால அளவிலேயே வழங்கப்படுகின்றன. வங்கிகள் முதன்மையாக நான்கு வகையான திருப்பிச் செலுத்தும் முறைகளை வழங்குகின்றன:
பகுதித் தவணைகள் (Part payments)
மாதாந்திர வட்டி மட்டும் செலுத்தி, இறுதியில் அசலைச் செலுத்தும் முறை
புல்லட் ரீபேமென்ட் (அசல் மற்றும் வட்டியை இறுதியாக மொத்தமாகச் செலுத்துதல்)
வழக்கமான மாதாந்திரத் தவணை முறை (EMI)
உங்களின் மாதாந்திர வருமானம் மற்றும் பணப்புழக்கத்திற்கு ஏற்பப் பொருத்தமான முறையைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், வங்கியிலிருந்து பெறப்படும் அறிவிப்புகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதன் மூலம், நகைகள் ஏலத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும்.