பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா அடிக்கடி தூங்குவது ஏன்? வனிதா கொடுத்த அடடே விளக்கத்தால் ஆடிப்போன நெட்டிசன்கள்

Published : Nov 30, 2023, 03:48 PM IST

பிக்பாஸ் வீட்டில் தனது மகள் அடிக்கடி தூங்குவதற்கான காரணத்தை வனிதா கூறியதை கேட்டு நெட்டிசன்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

PREV
14
பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா அடிக்கடி தூங்குவது ஏன்? வனிதா கொடுத்த அடடே விளக்கத்தால் ஆடிப்போன நெட்டிசன்கள்
vanitha daughter jovika

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன வனிதா, தற்போது தன் மகளையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கி உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் புலி போல சீறிப் பாய்ந்த ஜோவிகா, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மிகவும் சைலண்டாக விளையாடி வருகிறார். குறிப்பாக முதல் வாரத்தில் கல்வி விவகாரத்தில் விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அவரை வேறலெவலில் டிரெண்ட் ஆக்கியது.

24
Jovika

பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் இவரின் ஆட்டம் திசை மாறி சென்றுவிட்டது. குறிப்பாக மாயாவின் கேங்கில் சேர்ந்த பின்னர் ஜோவிகாவின் ஆட்டம் சுத்தமாக குளோஸ் ஆகிவிட்டது. மகளை எப்படியாவது மீண்டும் பார்முக்கு கொண்டுவரும் முனைப்பில் ‘சிங்கம் சிங்கிளா தான் வரும்’ என்கிற வாசகம் அடங்கிய டீசர்ட்டை அனுப்பி குரூப் சேராமல் தனியா விளையாடும்படி ஹிண்ட் கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
jovika vijayakumar

ஆனால் அதன்பின்னர் ஜோவிகா செய்யும் வேலைகள் அனைத்தும் மீம் டெம்பிளேட் ஆக மாறி உள்ளன. சிங்கிளாக இருக்க சொன்னால் அவர் சிங்கிளாக தூங்கி வழிகிறார். தினமும் சாப்பிட்டு தூங்குவதையே வேலையாக வைத்துள்ளதாக ஜோவிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தன் மகள் அடிக்கடி தூங்குவது ஏன் என்பது குறித்து வனிதா விஜயகுமார் புது விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

44
biggboss jovika

அதன்படி அவர் கூறியதாவது : “நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். அவள் மன உளைச்சலில் இருப்பதால் தான் இப்படி தூங்கி வருகிறார். 2 வாரங்களாகவே அவளுக்கு கெட்ட கனவு வந்ததில் இருந்தே ரொம்ப பாதிச்சு இருக்கா. அந்த வீட்டில் இருக்கும்போது மன அழுத்தமோ, மன உளைச்சலோ ஏற்பட்டால் தூக்கம் தான் வரும். எனக்கு தெரியும், எனக்கும் இந்த மாதிரி ஆகிருக்கு. நம்மளையே அறியாம நாம் தூங்கிருவோம்” என வனிதா கூறிய காரணத்தை கேட்டு நெட்டிசன்கள் ஆடிப்போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பருத்திவீரன் டூ ஜப்பான்... 25 படங்களில் நடித்த நடிகர் கார்த்தி இத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதியா?

click me!

Recommended Stories