அந்நிகழ்ச்சியில் இருந்து பார்வதி சீக்கிரமே எலிமினேட் செய்யப்பட்டாலும், அவர் இருந்த சில நாட்கள் அனல் பறந்தது என்றே சொல்லலாம். அந்நிகழ்ச்சியில் இவர் பேசிய பேச்சை பார்த்து, நீங்கள்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில இருக்க வேண்டியவங்க என்று கமெண்ட் செய்தவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு அதில் போட்டியாளர்களிடம் சண்டை போட்டு இருந்தார் பார்வதி.