மாயா மாறினாலும் அவரின் தோழியான பூர்ணிமா, புரணி பேசும் வேலையை தொடர்ந்து வந்ததால் அவருக்கு ரசிகர்களிடம் இருந்து எந்தவித கைதட்டல்களும் கிடைக்கவில்லை. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் எந்த ஒரு சீசனிலும் போட்டியாளர்கள் செய்யாத விஷயத்தை கடந்த வாரம் பூர்ணிமா செய்தார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனையே அவர் விமர்சித்து பேசி இருந்தார். அவர் ஒருதலைபட்சமாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, கமலை குடிகார அங்கிள் என்றும் திட்டி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D