கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.
27
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் வருகின்ற ஜனவரி 11 முதல் ஜனவரி 18 வரை இந்த ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் 45 கார் உற்பத்தியாளர்கள் உட்பட 70 கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
37
மாருதி சுசுகி (Maruti Suzuki), ஹூன்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) டொயோட்டா (Toyota), கியா (Kia), எம்.ஜி (MG) போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ள இருக்கிறது.
47
ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னணி நிறுவனங்களின் புதிய வாகனங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இது வாகனங்களை விரும்புவோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
67
வார நாட்களில் பொது மக்களின் நேரங்களுக்கு ரூ.350 முதல் வார இறுதி நாட்களில் ரூ.475 முதல் டிக்கெட் விலை தொடங்கும் என்றும், இதனை புக் மை சோ ஆப் மூலமாக பெறலாம் என்றும் எக்ஸ்போ ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோமொபைல்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கான்செப்ட் கார்கள், வணிக வாகனங்கள் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகனங்கள் அணிவகுப்பு ஒரே இடத்தில் இருப்பதால் எக்ஸ்போவுக்கான வரவேற்பு பெரிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.