நாத்திகர் வீடு: கடவுளை நம்பாத, பூஜைகள் செய்யாத வீட்டில் சாப்பிடக் கூடாது. வேதங்களை அவமதிப்பவர்கள், தர்மத்தை பின்பற்றாதவர்கள் வீட்டில் சாப்பிடுவது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
விருந்தினரை மதிக்காதவர் வீடு: 'விருந்தினர் கடவுளுக்கு சமம்' என்பது நம்ம ஊர் பழமொழி. ஆனால் வீட்டுக்கு வர்றவங்களை மதிக்காமல் அவமானப்படுத்துறவங்க வீட்டில் சாப்பிடறது நல்லதல்ல. அவங்க கூப்பிட்டாலும் போகக் கூடாது.
வட்டிக்கு பணம் கொடுப்பவர் வீடு: வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை கஷ்டப்படுத்துறவங்க வீட்டில் சாப்பிடக் கூடாதுன்னு சாணக்கியர் சொல்றார். ஏன்னா, அது நியாயமில்லாத வழியில சம்பாதிச்ச பணம். அந்த பாவப் பணத்துல செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டா, அந்த பாவத்துல நமக்கும் பங்கு கிடைச்சிடும்.