11 மற்றும் 12-ம் நாட்களில் செய்யப்படும் சிறப்பு சடங்குகள்
இந்த நாட்களில் செய்யப்படும் சிறப்புச் சடங்குகள், தான தர்மங்கள் மூலம் ஆன்மா தனது பசியை ஆற்றிக் கொள்கிறது. குடும்பத்தினர் செய்யும் பூஜைகள் மற்றும் மாலையில் ஏற்றப்படும் தீபத்தின் வெளிச்சம், ஆன்மா தனது பூலோகப் பற்றுக்களைத் துறந்து எமலோகப் பயணத்திற்குத் தயாராக வழிவகுக்கும்.
13-ஆம் நாளில் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்
கருட புராணத்தின்படி, மரணத்திற்குப் பிறகு 13-வது நாளில் தான் ஆன்மா தனது வீட்டை விட்டும், இந்த பூலோகத்தை விட்டும் நிரந்தரமாக வெளியேறுகிறது. 13-ம் நாள் சடங்குகள் முடிந்த பிறகு, எம தூதர்கள் ஆன்மாவை எமலோகத்தை நோக்கி அழைத்துச் செல்வார்கள். இந்த இறுதிப் பயணம் ஆன்மாவின் கர்மாக்களைப் பொறுத்து 47 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.