Astrology: அக்.15ல் குரு-புதன் நடத்தும் வானியல் அதிசயம்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகுது.!

Published : Oct 15, 2025, 03:06 PM IST

Tridashansh Yog: சுப கிரகங்களாக அறியப்படும் புதன் குரு இருவரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரிதசாஞ்ச யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
திரிதசாஞ்ச யோகம்

அக்டோபர் 15, 2025 ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தினத்தில் சிறப்பு வானியல் நிகழ்வு நடந்துள்ளது. புதன் மற்றும் குருபகவான் இருவரும் ஒருவருக்கொருவர் 108 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளனர். இதன் காரணமாக மங்களகரமான திரிதசாஞ்ச யோகம் உருவாகி இருக்கிறது. இந்த யோகமானது பிரம்மமுகூர்த்தத்திற்கு சற்று முன்பு அதிகாலை 3:03 மணிக்கு உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷட ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

24
ரிஷபம்
  • திரிதசாஞ்ச யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தருகிறது. 
  • புத்திசாலித்தனத்தின் காரகராக விளங்கும் புதன் பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு பேச்சுத் திறமையையும், பகுத்தறிவையும் கூர்மைப்படுத்துகிறார். 
  • அதே சமயம் குரு உங்கள் செல்வ வளத்தை அதிகரிக்கிறார். 
  • வணிகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்த காலத்தில் புதிய வாய்ப்புகள் மற்றும் லாபத்திற்கான வழிகள் திறக்கப்படுகிறது. 
  • நிலுவையில் இருந்த நிதி விஷயங்கள் தீர்க்கப்படும். 
  • பழைய முதலீடுகளில் இருந்து திடீர் லாபங்களை எதிர்பார்க்கலாம். 
  • இத்தனை நாட்களாக வாட்டி வதைத்து வந்த கடன் பிரச்சனைகள் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.
34
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் குரு இணைவு காரணமாக தொழில்துறையில் மகத்தான வெற்றிகள் கிடைக்க இருக்கிறது. உங்களின் திட்டமிடுதல் மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் இந்த காலத்தில் கணிசமாக அதிகரிக்கும். சவாலான சூழ்நிலைகளையும் எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமான காலத்திலிருந்து விடுபட்டு, சரியான பாதையை தேர்வு செய்வீர்கள். கல்வி, எழுத்து, மேலாண்மைத்துறையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைவீர்கள். போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணலுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த காலகட்டம் நேர்மறையான பலன்களைத் தரும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்கள் சுபமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

44
தனுசு
  • தனுசு ராசியை குருபகவான் ஆட்சி செய்கிறார். 
  • திரிதசாஞ்ச யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். 
  • குரு மற்றும் புதன் பகவான் இருவரும் இணைந்து தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளிக்க உள்ளனர். 
  • குழந்தைகள் தொடர்பான சுப செய்திகளை கேட்பீர்கள். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
  • திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
  • புதிதாக வீடு, வாகனம், சொத்து வாங்க திட்டமிடுபவர்களுக்கு சாதகமான காலமாகும். 
  • வாழ்க்கையில் புதிய நிலைத்தன்மை மற்றும் சமநிலை ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories