Sept 15 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே இன்னைக்கு வெற்றி வேணும்னா இந்த விஷயத்துல கவனமா இருங்க.!

Published : Sep 14, 2025, 09:50 PM IST

Today Rasi Palan : செப்டம்பர் 15, 2025 தேதி துலாம் ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
14
பொதுவான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். சில காரியங்கள் சாதகமாக முடியலாம். ஆனால் சில காரியங்கள் வெற்றிகரமாக முடிவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும். உங்கள் பொறுமை மற்றும் சமநிலையான உணர்வு உங்களுக்கு வெற்றியைத் தேடி தரும்.

24
நிதி நிலைமை:

உங்கள் நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் ஏற்படாது. அதே சமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பண விஷயங்களில் கவனமாக இருங்கள். கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். நிதி நெருக்கடியை தவிர்க்க திட்டமிட்ட செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். முதலீடு செய்வதற்கு முன்பு நன்கு ஆராய்ந்து எடுப்பது நல்லது.

34
தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். இருப்பினும் உங்கள் துணையுடன் பேசும் பொழுது வார்த்தையில் கவனமாக இருக்கவும். சிறிய தவறான புரிதல் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். மன அமைதிக்காக தியானம் அல்லது யோகா செய்வது பலன்களைத் தரும்.

44
பரிகாரங்கள்:

இன்றைய நாள் மேலும் சிறப்பானதாக அமைவதற்கு மகாலட்சுமி தாயார் அல்லது துர்க்கை அம்மனை வழிபடலாம். மலையில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை அளிக்கும். “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது பணவரவை அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories