செப்டம்பர் 17 ஆம் தேதி நடக்கும் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்பட உள்ளது. ஜோதிட கணக்கீடுகளின் படி இந்த இணைவு உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் உருவாகும். இதன் காரணமாக பண வரவு அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. லாபகரமான முதலீடுகளில் நிலையான அதிகரிப்பு ஏற்படும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் மரியாதை மற்றும் லாபத்தை பெறுவீர்கள். இந்த ராஜயோகமானது உங்கள் ஆளுமையிலும் மாற்றத்தை கொண்டு வரும். சுயமாக தொழில் செய்து வருபவர்கள், வியாபாரம் செய்து வருபவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.