
வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மங்களகரமான கிரகமாகவும், ஆற்றல் மிகுந்தவராகவும் அறியப்படுகிறார். இவர் அன்பு, அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக இருக்கிறார். இவரின் பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் 12 மாதங்களுக்குப் பிறகு அவர் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசியில் ஏற்கனவே சூரிய பகவான் இருப்பதால் அவருடன் இணைந்து நீச் பங்க் ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
நீச் பங்க் ராஜயோகம் என்பது பலவீனமான ராசியில் உள்ள ஒரு கிரகம், நல்ல கிரகத்துடன் இணையும் பொழுது உருவாகும் யோகமாகும். கன்னி ராசியானது புதன் பகவான் ஆளும் ராசியாகும். இது சுக்கிர பகவானுக்கு பலவீனமான ராசியாக கருதப்படுகிறது. இருப்பினும் சூரிய பகவான் கன்னி ராசியில் இருப்பதன் காரணமாக நீச் பங்க் ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)